Friday, June 29, 2012

                                இருந்தவனின் கேள்வி


அநேகமாய்
ஒவவொரு இறந்தவனையும்
அங்கிருந்த எவனோ
அல்லது
அவன் கூட இருந்த எவனோ
தவறாமல் கேட்கும் கேள்வி
"என்னப்பா இப்படி பண்ணிட்டு போய்ட்டே "  
என்பதே .

இறந்தவன் பின்னே
பிறந்ததா  வந்து
பதில் சொல்ல முடியும்!
இல்லை,
மறந்து எழத்தான் முடியுமா ..
இறந்தது என்ப்து
போனது அல்ல.
இறந்து இருப்பது ..

"உறங்குவ்து போலவும்   சாக்காடு"
என்ற வள்ளுவர்
"உறங்கி விழிப்பதுவும் போலவும்
பிறப்பு"
என்றும்  சொன்னார்
பிறவிகளை இணைத்த
பிதாமகன் .

'இறப்பது என்பதும் பிறப்பதே'

பிறவிகளை இணைப்பது பிறப்பு
எனின்
இருந்தவனின் கேள்விக்கான
பதில்
பிறந்தவன், பிறந்து அவன் சொல்வது எப்போது ?
கேட்டவன்
இருந்தும்
கேட்க முடியாது ..
இறந்தும் ....முடியாது...