கனவு...
கனவு...காண்பதற்காகவே ..
நான் கொள்ளும் உறக்கம்
மிக விருப்பமானது
ஏதோ இஷ்டமான உணர்வுடன்
இயல்பாக கிடைத்துவிட்ட
சந்தர்ப்பமானது
அந்த உறக்கங்கள்
வரும்.,என்று விரும்பி
உறங்கச் செல்ல ..
மனதில் இடம்பிடித்து
நிலவமைத்து ..
எங்கே அது?
என்று பார்த்தால்..
என்ன தேடுகிறாய்
என்றது அது .
உறங்கும்போது
நான் உன்னை
தேடுகிறேன் ..
என்றேன் .
நீ தேடும்போது வர
நான் என்ன கனவா ?
நீ மறக்கும்போது
உன்னை வந்தெழுப்பும்
நான்!
உன் நினைவு
என்றது.
கனவுக்கும்
கனவுக்குள் நினைவிற்கும்
கதவமைத்து ..
திறந்து
கதவடைத்து ..
திறந்து
கண்ணின் விழிவரை
வந்து இமைகளை பிடித்து
தொங்கிக்க்கொண்டிருந்த
அதை
திறந்து பார்த்தேன்
நிஜமாகவே
அது கனவு......வு......
No comments:
Post a Comment